வாக்களிக்கத் தகுதியான ஆவணங்கள் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளோம்: தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: மையில் பிரச்சனை இல்லை என்று ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சரியாக இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறுகையில், "காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கிய போது ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மையில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்படி மை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் தொடர்பாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதிக வாக்குச்சாவடி உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் ஆதார் அட்டையுடன் வாக்களிக்கவந்த வாக்காளர்கள் திருப்பியனுப்பப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆவணங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத அத்தகைய வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE