குரூப் 2 தேர்வு மதிய தேர்வு 2.30 மணிக்கு தொடங்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: குரூப் 2 தேர்வு மதிய தேர்வு 2.30 மணிக்கு தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடைபெற்று வரும் நிலையில், சில மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை காயிதே மில்லத் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியில் தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை துரைப்பாக்கம், கடலூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களிலும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை சரி செய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE