குடியரசுத் தலைவரின் தமிழக வருகை முதல் தி.மலை அப்டேட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @பிப்.18, 2023

By செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம்: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சனிக்கிழமை காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கச் சென்றார். இதற்காக, புது டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

“நகரமயமாதலில் தமிழகம் முன்னிலை” - முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் கிரிடாய் அமைப்பின் ரியல் எஸ்டேட் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் தலைவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். நகரமயமாதலில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE