புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது தேசம்: மோடி: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா' சர்வதேச விமான கண்காட்சி திங்கள்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூருவின் இன்றைய வான்வெளி சாட்சியாகிக் கொண்டிருக்கிறது. புதிய உயரங்களே புதிய இந்தியாவின் முகம் என்பதற்கு இந்த வான்வெளி சாட்சியாகிக்கொண்டிருக்கிறது. தேசம், புதிய உயரங்களைத் தொட்டு அதனைக் கடந்தும் செல்கிறது. பெருகிவரும் இந்தியாவின் திறமைக்கு "ஏரோ இந்தியா 2023" ஓர் உதாரணமாகும். இந்த கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றிருப்பது உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது" என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்