திருவாரூர்: கனமழை காரணமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார்.
இலங்கையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதியில் நாளை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை முதலே திருவாரூரில் கனமழை பெய்து வந்த நிலையில் நாளை (பிப்ரவரி 3, 2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் விவரம்: மன்னார் வளைகுடா, குமரிக் கடலை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன், தூத்துக்குடியில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» ‘சிங்கம்... சிங்கம்... இவர் சூப்பர் சிங்கம்!’ - போலீஸ் ‘அவதார’ தோனி போட்டோ வைரல்
» மதுரை சிறை நூலகத்திற்கு 300 புத்தகங்கள் வழங்கிய 92 வயது நெசவுத் தொழிலாளி: சிறை அதிகாரிகள் பாராட்டு
அதேபோல், கும்பகோணம் பகுதியில் பெய்த கனமழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் விவரம்: கும்பகோணத்தில் கனமழை: நெல் கொள்முதல் நிலையங்களை சூழ்ந்த மழைநீர்