தேமுதிக தேர்தல் பணிக்கு 168 பொறுப்பாளர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. அங்கு ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் பணிகளை கவனிக்க 168 பொறுப்பாளர்களை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் தலைமையில் 52 பேர், ப.பார்த்தசாரதி தலைமையில் 38 பேர், ஏ.எஸ்.அக்பர் தலைமையில் 6 பேர்,கொள்கை பரப்புச் செயலர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் தலைமையில் 34 பேர், அவைத் தலைவர் வி.இளங்கோவன் தலைமையில் 34 பேர் என 168 பொறுப்பாளர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE