வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு தோல்வி அல்லதுதேர்ச்சி, பிளஸ்-2, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்விதகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்பின்றிகாத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறசென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தை அணுக வேண்டும்.

மேலும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவிகள் கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE