பழநி கோயில் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு: அனுமதிச் சீட்டு பெற பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்

By செய்திப்பிரிவு

பழநி: பழநி முருகன் கோயில் இணைஆணையர் நடராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி காலை 8 முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in,அறநிலையத் துறை இணையதளமான www.hrce.tn.gov.in-ல்ஜன.18 முதல் 20-ம் தேதி வரைஇலவசமாக முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம்,ரேஷன் கார்டு - ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதையும் குறிப்பிட வேண்டும். ஜன.21-ம்தேதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படும் 2,000 பக்தர்களுக்கு ஜன.22-ம் தேதி பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அதன் பின்பு ஜன.23, 24-ம்தேதி காலை 10 முதல் மாலை5 மணி வரை தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாள சான்று நகலுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வேலவன் விடுதியில் இலவச அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்