சென்னையில் இருந்து 3 நாட்களில் 8,043 பேருந்துகளில் 4,66,494 பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் மூலம் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இதன்படி 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 6,300 பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 10,749 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று (ஜன.14) மதியம் 12 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 784 பேருந்துகளும், 463 சிறப்பு பேருந்துகள் என்று ஆக கடந்த 3 நாட்களில் மொத்தம் 8043 பேருந்துகளில் 4,66,494 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்க…- பேருந்து இயக்கம் குறித்து அறியவும்,புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்றஎண்களிலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002, 26280445, 26281611 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE