முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ் மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய சரத் யாதவ் அவர்கள் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுகொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார்.அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE