சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தா மரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக டிச. 27, 28, 29-ம் தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை பகுதிகளில்அதிகபட்சமாக 30 டிகிரி, குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும்.