கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? 

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு (Churches) செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புக்காவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், 24.12.2022 அன்று இரவு முதல் 25.12.2022 வரை, சென்னை பெருநகர காவல் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

போக்குவரத்து காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், கொண்டாட சென்னை பெருநகர காவல்துறை மூலம் மேலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுவதுடன், பொதுமக்கள் காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கடைபிடித்து மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE