கூட்டணி குறித்த பேச்சு: சி.வி.சண்முகத்துக்கு பாஜக கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்டணி குறித்து பேசிய அதிமுகமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: ‘பாஜக - திமுக கூட்டணி வரும். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக கடுமையாக விமர்சித்து வருவதோடு, ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாகவும் போராடி வருகிறது.பாஜக எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்கு சி.வி.சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ தேவையில்லை. அதற்கான உரிமை, தகுதியும் அவருக்கு இல்லை.

காவி துண்டு போட்டவன் பாஜகதொண்டன் என்றெல்லாம் நிதான மில்லாமல் பேசியிருப்பதும் அவரது பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் பாஜக குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE