கனமழை முன்னெச்சரிக்கை | நவ.9-க்குள் முடிக்க வேண்டிய பணிகள் - சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் அடுத்த கனமழை 9-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 31-ம் தேதி முதல் 3 வரை வரை சென்னையில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னையின் ஒரு சில பகுதிகளில் 48 மணிநேரத்திற்குள் 15 செ.மீ. முதல் 35 செ.மீ. வரை மழை பெய்தது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த கனமழை வரும் 9-ம் தேதி பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த 3 நாட்களில் பல்வேறு பணிகளை முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதன் விவரம்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE