வத்தலகுண்டு அருகே கண்மாயில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜா மகள் முத்து(8), ராஜாவின் தம்பி சின்னராஜா மகன் கிருத்திக்(8), சந்திரன் மகள் தனலட்சுமி(8). இவர்கள் அனைவரும் 3-ம் வகுப்புபடித்து வந்தனர்.
மூவரும் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு நேற்று விளையாடச் சென்றனர். அங்கிருந்த கண்மாயில் இறங்கி தண்ணீரைத் தெளித்து விளையாடியபோது முத்து, கிருத்திக், தனலட்சுமி ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர்.
தகவல் அறிந்து வந்த கிராமத்தினர் கண்மாயில் இறங்கி குழந்தைகளின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து விருவீடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago