மெட்ரோ சுரங்க பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. இந்தப் பணிகளை2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறுஇடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

அதிலும், சுரங்கப்பாதைப்பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுவரை 5 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் வந்துள்ளன. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை அருகில் சுரங்கம்தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, மெட்ரோ ரயில் பாதைக்கு முதல்சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் பணி தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE