சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள் 76பேரை பணியிட மாற்றம் செய்துடிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் சம்பத், ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட், திருச்சி மாவட்டநில மோசடி தடுப்பு பிரிவுக்கும், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பணிபுரிந்த கணேஷ், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் பணிபுரியும் சங்கர், திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவுக்கும், தஞ்சாவூரில் பணிபுரிந்து தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள கபிலன், சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணிபுரிந்து வந்த அலெக்சாண்டர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 76 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.