வைகை அணையில் கடந்த 27-ம் தேதி 62.95 அடியாக இருந்த நீர்மட்டம் தொடர் நீர்வரத்தினால் 30-ம் தேதி 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் நேற்று மாலை 68.5 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
69 அடியை எட்டியதும் மூன்றாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படும். தற்போது விநாடிக்கு 3,134 கனஅடி நீர்வரத்தும், 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.