ஓ.பன்னீர்செல்வத்திற்கு கரோனா அறிகுறி: மருத்துவமனை அறிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் கரோனா அறிகுறி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லேசான கரோனா அறிகுறிகளுடன் 15ம் தேதி தனிப்படுத்துதல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE