சிங்கம்புணரியில் வாடிக்கையாளர்களுக்கு 1 கிலோ தக்காளி, தேங்காய் இலவசம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க ரூ.200-க்கு காய்கறிகள் வாங்குபவர்களுக்கு 1 கிலோ தக்காளி, தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டன.

சிங்கம்புணரி பேரூராட்சியில் திண்டுக்கல் சாலையில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை, தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 7-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் வியாபாரிகள் சாலையோரங்களில் கடை அமைப்பதை தடுக்கும் வகையில், அவர்களுக்கும் உழவர் சந்தை வளாகத்திலேயே கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் உழவர் சந்தைக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் நேற்று ரூ.200-க்கு காய்கறிகள் வாங்கியவர்களுக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. தக்காளியை உதவி வேளாண்மை அலுவலர் காந்தி, தேங்காயை தொழிலதிபர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.

இதேபோல் இன்று (ஜூலை 13) முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரூ.200-க்கு காய்கறிகள் வாங்குவோருக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்குவதாக திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE