முதல்வர் ஸ்டாலின் உடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) ஆதரவு கோரினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இன்று சென்னை வந்த அவர், சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

யஷ்வந்த் சின்ஹா காங்கிரஸ் மதிமுக , சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் கோரினார். இந்தச் சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE