சுகாதாரமற்ற உணவுகளே மனிதருக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன. கடந்த மாதம் கேரள மாநிலத்தில் சவர்மாவை சாப்பிட்ட ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது. இவ்வாறு புதிய புதிய உணவுகள் வர வர உணவு பாதுகாப்பின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய உணவுப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "பாதுகாப்பான உணவே சிறந்த ஆரோக்கியம்“ என்ற கருப்பொருளோடு இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்