மாநிலங்களவை தேர்தல் | தமிழகத்தில் இருந்து போட்டியிடும் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 6 பேர் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இதன்படி வேட்மனு தாக்கல் செய்ய நேற்று ( மே 31) கடைசி நாள் ஆகும்.

இதன்படி திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோரும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆகியோர் மனு தாக்கல் செய்தார். இதுதவிர 5 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சட்டப்பேரவைச் செயலக செயலாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 நடைபெற்றது. இதில் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புனுக்கள் ஏற்றுக் கொள்ளப்ப்டடன. வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை ஜூன் 3 ஆம் தேதி வரை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

இதன்படி, தமிழகத்தில் 6 பதவிக்கு, கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே போட்டியிடும் நிலை இருக்கும். எனவே 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE