கடலூர் தொகுதியில் சீமான் கடும் பின்னடைவு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று நிலவரப்படி நாம் தமிழர் கட்சி 1% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 1,41,232 பேர் மட்டுமே அக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். மேலும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட கடலூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெறும் 1,691 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் முதல் நபராக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் தொடங்கினார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE