சித்திரை மாத அமாவாசை: சதுரகிரியில் 13,000 பக்தர்கள் வழிபாடு

By செய்திப்பிரிவு

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரியில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை- விருதுநகர் மாவட்ட எல்லையில் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதை முன்னிட்டு குறிப்பிட்ட தினங்களையொட்டி 4 நாட்களுக்கு மட்டும், சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல் இன்று (மே 1) வரை சதுரகிரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அமாவாசை தினமான நேற்று சதுரகிரி மலையில் சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

முகக்கவசம் மற்றும் கரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்