பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் ஒன்றிய செயலருக்கு நிபந்தனை ஜாமீன்

By கி.மகாராஜன்

மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையுடன் பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிமுக-வினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்குp பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் அன்னபிரகாஷ், ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அன்னபிரகாஷ், திருவண்ணாமலையில் 30 நாட்கள் தங்கியிருந்து, தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்