பிரதமருக்கு ஓபிஎஸ் பாராட்டு

சென்னை: தமிழக மாணவர்களை மீட்டதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர்மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: உங்களின் திறமையான தலைமையின் கீழ் இயங்கும் மத்திய அரசு, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலமாக அனைத்து இந்திய மாணவர்களையும் மீட்டதுள்ளது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான்மற்றும் வங்கதேச மாணவர்களையும் மீட்டதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் போர் நடைபெறும் பகுதியில் சிக்கிய இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது உண்மையிலேயே பாரட்டத்தக்கது.

இது வெளிநாடுகளில் பிரதமரின் செல்வாக்கை காட்டுகிறது. உக்ரைனில் இருந்து அனைத்துஇந்தியர்களையும் வெளியேற்றுவதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு தமிழக மக்கள்மற்றும் அதிமுக சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்