சென்னை: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள ரஷ்ய துணை தூதரகம், ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கமாக ஆயுதப்படை காவலர்கள் மட்டும் பணியில் இருப்பார்கள்.
இப்போது ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தலா 10 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துணை தூதரகம், கலாச்சார மையம் இருக்கும் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புபணியில் ஈடுபடுகின்றனர். இந்த இரு இடங்களுக்கும் வரும் நபர்கள், முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago