மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் தலைவர் - சந்திரசேகர ராவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: "மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று (வியாழக்கிழமை) தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில உரிமைகளுக்காகவும், பிராந்திய சுயாட்சிக்காகவும் தொடர்ந்து போராடி வரும் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திர சேகர் ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கூட்டுறவு கூட்டாட்சித் தன்மையையும், மாநிலங்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க அனைவரும் பாடுபடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE