மக்களை தொடர்ந்து சந்தித்து திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்: தொண்டர்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

திமுகவினர் மக்களை சந்தித்து மிகப்பெரிய வெற்றியை உறுதிப் படுத்த வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

மதுரை மாநகராட்சியின் 5,6,7,8,9,11,13 ஆகிய 7 வார்டு களில் போட்டியிடும் திமுக வேட் பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருப்பாலையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியது: மதுரை மாநகராட்சித் தேர்தலில் நமது கூட்டணியில் போட்டியிடும் அனைவரின் வெற்றியையும் உறுதி செய்ய திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். 8 மாதத்துக்குள் தேர் தல் அறிக்கையில் அறிவித்த 70 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளோம். ஆட்சியில் இருக்கும்போது பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களை நிறை வேற்றுவோம் என மக்களிடம் வீடு, வீடாகச் சென்று உறுதியளிக்க வேண்டும். மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து இதுவரை நாம் ஆற்றிவரும் பணிகளை நினைவூட்ட வேண்டும்.

பிப்.15-ம் தேதி பிரச்சா ரத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மதுரை வருகிறார். அன்று மாநகர் விரிவாக்கப் பகுதியின் 29 வார்டுகளின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆனையூரிலும், 71 வார்டுகளின் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாநகரிலும் உதயநிதி பிரச்சாரம் செய்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE