சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீதி நிர்வாகத்தில் தங்களது அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.