குறையும் கரோனா தொற்று: தமிழகத்தில் இன்று 22,238, சென்னையில் 3,998 பேருக்கு பாதிப்பு; 26,624 பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 33,25,940. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,84,470.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

சென்னையில் 3,998 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 261 தனியார் ஆய்வகங்கள் என 330 ஆய்வகங்கள் உள்ளன.

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,03,926.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,16,24,216.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,36,952.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 33,25,940.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 22,238 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,998.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 36,800.

* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 13,251 பேர். பெண்கள் 8,987 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.

* இதுவரை தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 19,40,046 பேர். பெண்கள் 13,85,856 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 26,624 பேர்.

* மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 30,84,470 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 38 பேர் உயிரிழந்தனர். 23 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் மொத்தம் 8936 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 37 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர்கள் ஒருவர்.

இன்று மாநிலம் முழுவதும் 39044 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 22801 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9168 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE