நெல்லை, தூத்துக்குடி மேயர் பதவியை எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னின் மைந்தர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கனகமுத்து, உயர் நீதிமன்ற கிளையில்தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில்தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் எஸ்சி பிரிவினருக்கும், நகராட்சிகளில் 21-ம்,பேரூராட்சிகளில் 88-ம் எஸ்சி-எஸ்டிபிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் சென்னையை சுற்றியே 3 மாநகராட்சிகள் எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்சி மக்கள் தமிழகம்முழுவதும் உள்ளனர். ஆனால்எஸ்சி, எஸ்டி மக்கள் தொகைக்குஏற்ப நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.
எனவே, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவி இடஒதுக்கீடு அரசாணையை ரத்துசெய்து, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியை எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.