பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளாதவர்கள் நாளை காலை முதல் பெறலாம்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியபடி ஜன.16-ம் தேதி (இன்று) சென்னை தெற்குமண்டல இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை கடைகளில் இறக்கிவைக்கும் பணி நடைபெறும்.

ஜன.17-ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படும். இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்புபெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 17-ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல்நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE