10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19-ல் தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு;

நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் அடைவுத்திறனை சோதிக்கும் விதமாக 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி, மார்ச் மாதங்களில் முதல் மற்றும் 2-ம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும்.

இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21-ல் தொடங்கி 29-ம் தேதி வரை நடத்தப்படும்.

விரிவான தேர்வுக் கால அட்டவணையை பள்ளி ஆசிரியர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும், திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் எனவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE