தண்டவாள பராமரிப்பு பணியால் தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தாம்பரம் தடத்தில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை கருத்தில்கொண்டு, தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே இன்றும் (செப். 5), வரும் 12, 19-ம் தேதிகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.45 மணி ரயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 10.50 மணி ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12, 1.20, 2, தாம்பரத்துக்கு காலை 11.30, மதியம் 12.20, 12.40, 1, 1.40, 2.30 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.20,11.30 மதியம் 12.10, 12.30, 1 மணி, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 8.45, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25, திருமால்பூர்-சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE