ஆகஸ்ட் 13-ல் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம்:  ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறு இருக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக்த்தில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில், அதிமுக எம்எல்ஏ.,க்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்றைய தினம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெறுகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE