தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல்: அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு முஸ்லிம் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிவுக்குப் பின்வரும் தேர்தல் கால அட்டவணை, இன்று தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் செய்தல்- 12.08.2021 (வியாழக் கிழமை) (முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை)

வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள்- 16.08.2021 (திங்கள் கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)

வேட்பு மனு சரிபார்த்தல்- 17.08.2021 (செவ்வாய்க் கிழமை) (பிற்பகல் 1.00 மணிக்குள்)

வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாள்- 18.08.2021 (புதன் கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)

வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள்- 19.08.2021 (வியாழக்கிழமை)

தேர்தல் அவசியமானால், 26.08.2021 (வியாழக் கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600001-ல் நடைபெறும்.

தேர்தல் முடிவுகள்- 27.08.2021 (வெள்ளிக் கிழமை) அன்று வெளியிடப்படும்''.

இவ்வாறு சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்