தமிழகத்தில் இன்று 5,751 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 350 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 8,132 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 24,55,332. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,31,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,75,963.
இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் மூன்று பேருக்குத் தொற்று இல்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 43,74,182 பேர் வந்துள்ளனர்.
சென்னையில் 350 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,401 பேருக்குத் தொற்று உள்ளது.
* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 204 தனியார் ஆய்வகங்கள் என 273 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,318.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,11,86,821.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,68,406.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 24,55,332.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,751.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 350.
* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 3,611
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,35,730 பேர். பெண்கள் 10,19,564 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,297 பேர். பெண்கள் 2,458 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,132 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 23,75,963 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 150 பேர் உயிரிழந்தனர். 55 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 95 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32,051ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8,143 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 125 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 25 பேர்.
இன்று மாநிலம் முழுவதும் 38,551 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,811 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 5,494 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.