புதுச்சேரியில் 815 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 16 பேர் உயிரிழப்பு

By முன்னடியான்

புதுச்சேரில் புதிதாக 815 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜூன் 3) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,034 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 650 பேரும், காரைக்காலில் 125 பேரும், ஏனாமில் 29 பேரும், மாஹேவில் 11 பேரும் என மொத்தம் 815 (9.02 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 12 பேர், காரைக்காலில் 4 பேர் என 16 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஏனாம், மாஹேவில் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இவர்களில் 7 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 114 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,389 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8, 626 பேரும் என 10 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 950 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 516 (89.17 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 10 லட்சத்து 76 ஆயிரத்து 259 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 317 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 172 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது"கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்