நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக பகுதியில் காற்று வீசுவதில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக 23, 24-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியைஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
25, 26-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
22-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 3 செமீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை, தேனி மாவட்டம் சோத்துப்பாறை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகிஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago