தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்றும், நாளையும் மின்சாரரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 44 ரயில்கள் இன்று பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய கால அட்டவணை
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய பாதைஅமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் -அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்சேவையில் 20, 21-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) மாற்றம்செய்யப்பட்டுள்ளது. வழக்கமான ரயில்களின் சேவை குறைக்கப்பட்டு, திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரயில்களுக்கான புதியகால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (20-ம் தேதி)சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு 44 ரயில்கள், தாம்பரத்துக்கு 30, செங்கல்பட்டுக்கு 23, அரக்கோணம் - செங்கல்பட்டு 6, திருமால்பூர் - செங்கல்பட்டு 1, பல்லாவரம் - கடற்கரை 44,தாம்பரம் - கடற்கரை 33, செங்கல்பட்டு - கடற்கரை - 23, செங்கல்பட்டு - அரக்கோணம் 6, செங்கல்பட்டு - திருமால்பூர் 1 என மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல, நாளை (21-ம் தேதி) சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு 32,தாம்பரத்துக்கு 24, செங்கல்பட்டுக்கு 11, பல்லாவரம் - கடற்கரை 33, தாம்பரம் - கடற்கரை 25, செங்கல்பட்டு - கடற்கரை 12 என மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது பாதை அமைப்பதால் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago