குரூப்-2ஏ தேர்வு ஏற்கெனவே திட்டமிடப்பட்டபடி ஜூன் 29-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பதவிகளில் 2,846 காலியிடங்களை நிரப்ப மே 18-ம் தேதி குரூப்-2ஏ தேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு தேதி ஜூன் 29-ம் தேதிக்கும், அதேபோல் ஏப்ரல் 26-ல் நடைபெறுவதாக இருந்த குரூப்-1 தேர்வு ஜூலை 20-ம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டன.
குரூப்-2ஏ தேர்வு நடக்கும் அதே ஜூன் 29-ம் தேதி பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித் தேர்வும் நடக்க உள்ளது. ஒரே நாளில் குரூப்-2ஏ தேர்வும், நெட் தேர்வும் வருவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வு மாற்றியமைக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்தனர்.
குரூப்-2ஏ தேர்வு தேதி மாற்றப்படுமா? என்று டிஎன்பிஎஸ்சி செயலா ளர் மா.விஜயகுமாரிடம் கேட்ட போது, “ஏற்கெனவே திட்டமிட்டபடி குரூப்-2ஏ தேர்வை ஜூன் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது என்று ஆணையம் முடிவெடுத்துள்ளது. எனவே, முன்பு அறிவிக்கப்பட்ட படி குரூப்-2ஏ தேர்வு ஜூன் 29-ம் தேதியும், குரூப்-1 முதல்நிலைத் தேர்வும் ஜூலை 20-ம் தேதியும் நடக்கும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago