பெரம்பலூர் அருகே தானிய சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: ரூ.4 கோடி மதிப்புள்ள பருத்தி, மக்காச்சோளம் சேதம்

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் அருகே தனியார் தானிய சேமிப்புக் கிடங்கில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள பருத்தி, மக்காசோளம் எரிந்து சேதமானது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் கிராமத்தை அடுத்த சிறுகன்பூரைச் சேர்ந்தவர் ராமராஜ். இவருக்குச் சொந்தமாக சிறுகன்பூரில் உள்ள தானிய சேமிப்புக் கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தபருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரம் பிரித்து,விற்பனைக்காக வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்தக் கிடங்கில் நேற்று அதிகாலை தீ விபத்து நேரிட்டது. இதில், மூட்டைகளில் சேமித்து வைத்திருந்த பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவை எரிந்தன.

தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், ரூ.4கோடி மதிப்புள்ள பருத்தி,மக்காச்சோளம் எரிந்து நாசமடைந்ததாக கூறப்படுகிறது. இங்கு பணியாற்றிய 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிபத்தில் காயமின்றி உயிர் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE