அதிமுக செய்தித்தொடர்பு செயலாளராக வைகைச்செல்வன் நியமனம்: ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அதிமுக செய்தித்தொடர்பு செயலாளராக வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பொறுப்புகள்

மேலும், கட்சியினர் மத்தியில் உள்ள அதிருப்திகளைக் களையும் வகையில், அமமுகவில் இருந்து வந்த பல்வேறுநிர்வாகிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முன்னாள்அமைச்சரும், செய்தித்தொடர்பாளருமான வைகைச்செல்வனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிமுக செய்தித் தொடர்புசெயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார். கட்சியினர் இவருக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE