காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை- பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்ப தாவது:

மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் சட்டப்படியாக அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு வழிகாட்டுவதில் தங்களின் தலையீட்டைக் கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

காவிரி நடுவர் மன்ற ஆணை பற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளியானதுமே, காவிரி ஒப்பந்தத்

தின் அமலாக்கத்தை மேற்பார்வை யிடுவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக அமைப்புகளை மாற்றி, காவிரி மேலாண்மை வாரியம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காவிரி பிரச்சினையை விவாதிப் பதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி மத்திய அரசிடம் நீதி கேட்போம் என தமிழக அரசை கேட்டுக்கொண்டேன். அத்தகைய ஒரு கூட்டம் தமிழக மக்களின் ஒற்றுமையை காட்டும். குறிப்பாக போதுமான பாசன நீர் இல்லாமல் துன்பப்படும் விவசாயிகளின் ஒற்றுமையைக் காட்டும் என கூறியிருந்தேன். ஆனால் எனது வேண்டுகோளை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்கு இருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதையும் தங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்