அதிமுக ஆட்சியில் துணிச்சலாக முறைகேடுகள் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

முறைகேடுகளை துணிச்சலாக செய்கின்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூரை கொல்லாபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என அதிமுக அமைச்சர்களுக்கு தெரிந்துவிட்டதால், கமிஷனுக்காக பல்வேறு பணிகளுக்கு விரைவாக டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன.

ஒரு கோடிக்கு மேல் டெண்டர் விடப்பட்டால், பொதுப்பணித்துறை மண்டல பொறியாளரே டெண்டர்களை முடிவு செய்யலாம் என கடந்த மாதம் திருத்தம் செய்து டெண்டர் விட்டுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை துணிச்சலாக செய்கின்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி.

தற்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் மக்களுக்காக போராடும் இயக்கமாக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்தை போக்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி யடையும் வகையிலும் திமுக அரசு அமையும் என்றார்.

நிகழ்ச்சியில், கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர்கள் அரியலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் ராஜேந்திரன், சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE