நான் ‘டிரெய்லர்’; தலைவர்தான் ‘கிளைமாக்ஸ்’ - கரூரில் உதயநிதி ஸ்டாலின் கருத்து

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியின் 2-ம் நாளான நேற்று வாக்குச்சாவடி குழு முகவர் சந்திப்புக் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. திமுக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், திமுக இளை ஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள 4 தொகுதி களிலும் திமுக போட்டியிட கட்சித் தலைவருடன் பேசி முடிந்தவரை முயற்சி செய்கிறேன். கடந்த தேர்தலைவிட வரும் தேர்தலில் அதிக இடங்களில் திமுக போட்டி யிட வாய்ப்புள்ளது. இவ்வாறு நான் தொடர்ந்து பேசுவதால், கூட்டணி கட்சித் தலைவர்கள் என் மீது கோபத்தில் உள்ளனர். நான் வெறும் டிரெய்லர்தான், தலைவர் தான் கிளைமாக்ஸ்’ என்றார்.

இதில், மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், பழைய ஜெயங் கொண்டம், தோகைமலை உட்பட பல்வேறு இடங்களில் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE