அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்பு அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வழிபடுவதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோர் நேற்று வந்திருந்தனர். அங்கு நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற பிறகு, சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் 5 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் கேட்கப்படும். அதன் பிறகே வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும்.
ரஜினிகாந்த் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு குறித்து நான் எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை. அவருடைய உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்க வேண்டும். அவருடைய கலையுலக பயணமாக இருந்தாலும் சரி, அவருடைய எந்த முயற்சியாக இருந்தாலும் சரி அது சிறப்பாக அமைய வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago