புதுச்சேரியில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: 97.30 சதவீதம் பேர் குணமடைந்தனர்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை 97.30 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 6) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,105 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 13 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், ஏனாம் ஒருவருக்கும், மாஹே 18 பேருக்கும் என மொத்தம் 35 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 614 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவுமே உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 244 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 190 பேரும், வீட்டுத் தனிமையில் 202 பேரும் என மொத்தம் 392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 62 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 238 (97.30 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4 லட்சத்து 19 ஆயிரத்து 60 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 77 ஆயிரத்து 553 பரிசோதனைகளுகு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்